அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி என்பவர் ஸவுதி அரேபியாவில் ஷீஆக்களின் சிம்ம சொப்பனமாக திகழக்கூடியவர்.அவர் தனது அறிவு ஆற்றல் ஆயுற்காலம் அனைத்தையும் ஷீஆக்களுக்கெதிராகவே பயன்படுத்துகின்றார்.அந்த வகையில் ஷீஆக்களின் பொய்முகத்தை தோலுரித்துக்காட்டும் பல நூல்களைத் தொகுத்துள்ளார்.
.من عقائد الشيعة என்ற அவரது நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு முறை தொடராக எனது தளத்தில் வெளியிடப்படும்.
(முஹம்மது கைஸான் தத்பீகி )
மூல நூலாசிரியரின் முன்னுரை.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!. ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள ராபிழாக்களின் பிரசாரத்தின் எழுச்சியையும் அதனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தையும் இந்நுாலைப் படிப்பவர்களால் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
இப்பிரிவினால் ஏற்பட்டுள்ள அபாயம் அதன் கொள்கை கோட்பாடுகள் என்ன? அல்குர்ஆன் நபித்தோழர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் என்ன? தமது இமாம்கள் மீது அளவு கடந்து இவர்கள் வைத்துள்ள பற்று போன்றவற்றை அறியாத முஸ்லிம்கள் அநேகர் உள்ளனர். எனவே இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள
التعليقات على متن لمعة الإعتقاد என்ற இமாம் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் ஜப்ரீன் அவர்களின் நுாலின் துணையுடனும் ராபிழாக்கள் குறித்து அவர்களின் புகழ் பெற்ற நூல்கள் அவர்களின் மோசமான கொள்கைகள் பற்றிப் பேசும் முக்கிய வரலாற்று நூல்களின் துணை கொண்டும் இந்நூலை தொகுத்துள்ளேன்.