இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் போராடாமல் இருப்பது ஏன்?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைப்பின் தலைவர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்த பதிலை அப்படியே வெளியிடுகிறோம்.
ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப்பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையோ இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.