நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Thursday, September 29, 2011


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)




உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை


ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம் எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (07)



அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)                              

இமாமிய்யா பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு

தங்கள் இமாம்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், மறைவானவற்றையும் அறிகின்றவர்கள் என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
'உஸுலுல் காபி' எனும் நூலில் 'இமாம்கள் தாம் விரும்பினால் எதையும் அறிவார்கள்' என்ற தலைப்பில் குலைனி என்பவர், 'இமாம்கள் தாம் அறிந்துகொள்ள விரும்பினால் அறிவர்கள். தாம் எப்போது மரணிப்போம் என்பதையும் அறிவதோடு, அவர்களின் விருப்பமின்றி மரணிக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

Thursday, September 22, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (06)

அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)
                              
யூதர்களுக்கும் ராபிழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில், 'யூதர்கள் சொன்னார்கள் ஆட்சி, அதிகாரம் என்பன தாவுத் நபியுடைய குடும்பத்திற்குச் சொந்தமானது. அதேபோல், ராபிழாக்கள் சொன்னார்கள் இமாம் அலியுடைய பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது ராபிழாக்கள் யூதர்களுடைய வேலையைச் செய்வதே அதற்குரிய அத்தாட்சியாக உள்ளது.

யூதர்கள் தஜ்ஜால் வெளிப்படாதவரை ஜிஹாது இல்லை என்றனர். மேலும் அவர்கள் சந்திரன் மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.அவ்வாறே ராபிழாக்களும் சந்திரன் மறையும் வரை மஃரிபை பிற்படுத்தினார்கள்.

Friday, September 16, 2011



ஷீஆக்களின்
சீர் கெட்ட கொள்கைகள் (05)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் :

முஹம்மது கைஸான் (தத்பீகி

நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை

அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி  என்ற நுர்லில் அல் குலைனி  என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.

அதற்கவர்:

01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி  
03. சல்மானுல் பாரிஸி என்றார்.

பிகாருல் அன்வார் எனும் நுர்லில்  மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்

Thursday, September 15, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்(02)





உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு 
முகம்மது கைஸான் (தத்பீகி)



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.

குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும். ஒரு பெண் எதை விரும்புகின்றாலோ அதை அவள் செய்து கொள்ளட்டும்.இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காகஅறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger