Showing posts with label தீய குணங்கள். Show all posts
Showing posts with label தீய குணங்கள். Show all posts
Sunday, October 23, 2011
நாவின் விபரீதங்கள் (01)
![]() |
முஹம்மது கைஸான் (தத்பீகி)
மனிதனது உடல் உறுப்புக்கள் யாவும் இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட் பேராகும்.சிந்திப்பதற்கு மூளை எண்னுவதற்க்கு இதையம் பேசுவதற்கு நாவு கேட்பதற்கு காது பார்ப்பதற்க்கு கண்கள் நடப்பதற்;கு கால்கள் பணி செய்ய கைகள் என பல் வேறு உறுப்புக்களை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.
இவ்வுறுப்புக்கள் அனைத்தும் இறைவனுக்குறியவை. இறைவனே இவற்றின் உரிமையாளன்.இறைவனின் பேரருளால்தான் இவைகள் நமக்கு கிடைத்துள்ளன என நாம் ஒவ்வொறுவரும் உணர கடமைப்பட்டுள்ளோம்.
Labels:
தீய குணங்கள்
Saturday, June 25, 2011
விலக்கப்பட்ட புறமும் இழக்கப்படும் நன்மைகளும்
முகம்மது கைஸான் ( தத்பீகி )
பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதிலலை.தனது சகோதர முஸ்லிமின் குறைகளை அம்பலப்படுத்தி சந்திக்கிழுப்பது அச்சபைக்கு சக்கரைப்பொங்கலாக மாறிவிடும். பொதுவாக மாற்றாரின் விவகாரம் என்றால் அது தேனை விட தித்திப்பாகி விடுகின்றது.தேனாவது கொஞ்ச நேரத்தில் திகட்டி விடும்.ஆனால் இது திகட்டாது. இதனால் தான் புறம் பேசுபவரும் புறம் கேட்பவரும் தேன் அருந்துவதைப் போன்று அடுத்தவரின் குறைகளை ரசித்து ருசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக புறம் பேசப்படுபவர் பகைவராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தால் அதை சொல்ல வேண்டியதில்லை.தலையிலிருந்து பெறு விரல் வரை பேசி முடிப்பார்கள். சமூகத்தில் உள்ள அத்தனை மட்டத்தாரும் இதில் புகுந்து விளையாடுகின்றனர்.நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் இந்த நோய் பரவியுள்ளது
மார்க்கத்தில் பிடிப்பும் பற்றும் உள்ள நல்லடியார்களைக்கூட ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்த பாவத்தில் விழச்செய்துள்ளான் என்றால் இது எவ்வளவு பெரிய தீமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Labels:
தீய குணங்கள்