நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...
Showing posts with label நல்லோர் வரலாறு. Show all posts
Showing posts with label நல்லோர் வரலாறு. Show all posts

Friday, October 26, 2012



பீஜே பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

ஆக்கம் முஹம்மத் ஆஷிக்


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!



நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.



உளமார்ந்த பிரார்த்தனைகள் வேண்டி ...




சத்தியமார்க்கம்.காம் என்ற இணையதளம் அறிஞர் பீஜேவின் சுகவீனம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியை நன்றியுடன் இங்கு வெளியிடுகின்றேன்.
 முஹம்மது கைஸான் (தத்பீகி)


ண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவைஅஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாஅனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறைவிளக்கம்வரலாறுஹதீஸ் கலைஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்பன்னூலாசிரியர். அந்நஜாத்அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோதுஇவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

மவ்லவி எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) ஒரு சிறந்த பிரசாரகர்

Monday, October 31, 2011

எம். ஏ. ஹபீழ் ஸலபி

இந்த கட்டுரை மவ்லவி எம் ஏ ஹபீல் (ஸலபி்) அவர்கள் அழைப்பு இதழின் ஆசிரியர் குழாமாக பொறுப்பு வகித்த போது எழுதிய ஆக்கம். காலம் கடந்து வெளியிடுவதால் .இணையதள வாசகர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ( முகம்மது கைஸான் (தத்பீகி)


அன்று 14.04.2007 காலை நேரம் மவ்லவி  எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) அவர்களின் மரணச் செய்தி கேட்டு என் மனம் கவலையடைந்தது. அதே போல் இச்சோகச் செய்தி தவ்ஹீத் நெஞ்சங்களை எல்லாம் ஆட்கொண்டது.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger