நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Tuesday, November 15, 2011

ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (10)

அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)


முத்ஆ- வாடகைத் - திருமணம்  அதன் சிறப்புப் பற்றி ராபிழாக்களின் நிலை


முத்ஆ திருமணத்திற்கு ராபிழாக்களிடம் தனிச் சிறப்பு உள்ளது.
இக்கொடூர விபச்சாரத்திலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
 'மன்ஹஜூஸ் ஸாதிகீன்' எனும் நூலில் பத்ஹுல்லாஹில் கஷானி என்பவர், ஸாதிக் சொன்னதாக பின்வருமாறு கூறுகிறார்.

மவ்லவி எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) ஒரு சிறந்த பிரசாரகர்

Monday, October 31, 2011

எம். ஏ. ஹபீழ் ஸலபி

இந்த கட்டுரை மவ்லவி எம் ஏ ஹபீல் (ஸலபி்) அவர்கள் அழைப்பு இதழின் ஆசிரியர் குழாமாக பொறுப்பு வகித்த போது எழுதிய ஆக்கம். காலம் கடந்து வெளியிடுவதால் .இணையதள வாசகர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ( முகம்மது கைஸான் (தத்பீகி)


அன்று 14.04.2007 காலை நேரம் மவ்லவி  எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) அவர்களின் மரணச் செய்தி கேட்டு என் மனம் கவலையடைந்தது. அதே போல் இச்சோகச் செய்தி தவ்ஹீத் நெஞ்சங்களை எல்லாம் ஆட்கொண்டது.

ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (09)


அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)



கர்பலா மண் பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு

கர்பலாவிலுள்ள ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணையே ராபிழாக்கள் கும்பிடுகின்றனர். அல்மிஸார் எனும் நூலில் ஷெய்குல் முபீத் எனும் முஹம்மது நுஃமான் அல் ஹாரிஸ் என்பவர், அப்துல்லாஹ் சொன்தாக குறிப்பிடுகிறார். 'எல்லா நோய்களுக்கும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணில் நிவாரணமுள்ளது. அது தான் ஆகப் பெரிய நிவாரணம் ஆகும்.'
  'ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ருடைய மண்ணினால் உங்கள் குழந்தைகளை 'தஹ்னீக்' செய்யுங்கள்' என அப்துல்லாஹ் என்பவர் கூறுகிறார்.

Sunday, October 23, 2011

நாவின் விபரீதங்கள் (01)




       முஹம்மது கைஸான் (தத்பீகி)

மனிதனது உடல் உறுப்புக்கள் யாவும் இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட் பேராகும்.சிந்திப்பதற்கு மூளை எண்னுவதற்க்கு இதையம் பேசுவதற்கு நாவு கேட்பதற்கு காது பார்ப்பதற்க்கு கண்கள் நடப்பதற்;கு கால்கள் பணி செய்ய கைகள் என பல் வேறு உறுப்புக்களை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

இவ்வுறுப்புக்கள் அனைத்தும் இறைவனுக்குறியவை. இறைவனே இவற்றின் உரிமையாளன்.இறைவனின் பேரருளால்தான் இவைகள் நமக்கு கிடைத்துள்ளன என நாம் ஒவ்வொறுவரும் உணர கடமைப்பட்டுள்ளோம்.

Thursday, October 13, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (08)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)


மரணித்தவர்களின் மீள் வருகை பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை


'ரஜ்இய்யா' என்ற கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ராபிழாக்களே ஆவர்.   'மரணித்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள்' என இமாமிய்யாக்கள் நம்புகின்றனர் என முபீத் என்பவர் கூறுகிறார்.

அவர்களின் இறுதி இமாம் காயிம் என்பர் குகையிலிருந்து உலக முடிவின் போது வெளியாகி வருவார் என்றும் அவர் எல்லா அரசியல் எதிரிகளையும் பழிதீர்ப்பார் என்றும் வரலாற்று நெடுகிலும் பறிக்கப்பட்ட ஷீஆக்களின் உரிமைகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பார் என நம்புகின்றனர்.

'அபூபக்கர், உமர் ஆகியோர் மஹ்தியின் காலத்தில் மரத்தில் அறையப்படுவார்கள். அறைவதற்கு முன் பசுமையாக இருந்த மரம் அறைந்த பின் காய்ந்து விடும்' என்று 'அல்மஸாயிலுன் நாஸிரிய்யா' என்ற தனது நூலில் முர்தழா என்பவர் எழுதுகின்றார்.

Thursday, September 29, 2011


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)




உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை


ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம் எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (07)



அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)                              

இமாமிய்யா பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு

தங்கள் இமாம்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், மறைவானவற்றையும் அறிகின்றவர்கள் என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
'உஸுலுல் காபி' எனும் நூலில் 'இமாம்கள் தாம் விரும்பினால் எதையும் அறிவார்கள்' என்ற தலைப்பில் குலைனி என்பவர், 'இமாம்கள் தாம் அறிந்துகொள்ள விரும்பினால் அறிவர்கள். தாம் எப்போது மரணிப்போம் என்பதையும் அறிவதோடு, அவர்களின் விருப்பமின்றி மரணிக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

Thursday, September 22, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (06)

அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)
                              
யூதர்களுக்கும் ராபிழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில், 'யூதர்கள் சொன்னார்கள் ஆட்சி, அதிகாரம் என்பன தாவுத் நபியுடைய குடும்பத்திற்குச் சொந்தமானது. அதேபோல், ராபிழாக்கள் சொன்னார்கள் இமாம் அலியுடைய பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது ராபிழாக்கள் யூதர்களுடைய வேலையைச் செய்வதே அதற்குரிய அத்தாட்சியாக உள்ளது.

யூதர்கள் தஜ்ஜால் வெளிப்படாதவரை ஜிஹாது இல்லை என்றனர். மேலும் அவர்கள் சந்திரன் மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.அவ்வாறே ராபிழாக்களும் சந்திரன் மறையும் வரை மஃரிபை பிற்படுத்தினார்கள்.

Friday, September 16, 2011



ஷீஆக்களின்
சீர் கெட்ட கொள்கைகள் (05)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் :

முஹம்மது கைஸான் (தத்பீகி

நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை

அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி  என்ற நுர்லில் அல் குலைனி  என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.

அதற்கவர்:

01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி  
03. சல்மானுல் பாரிஸி என்றார்.

பிகாருல் அன்வார் எனும் நுர்லில்  மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்

Thursday, September 15, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்(02)





உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு 
முகம்மது கைஸான் (தத்பீகி)



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.

குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும். ஒரு பெண் எதை விரும்புகின்றாலோ அதை அவள் செய்து கொள்ளட்டும்.இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காகஅறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.

Thursday, August 25, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


உலகில் உள்ள மதங்கள் சில வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன. பெரும்பாலும் மனிதனின் அன்றாட நிகழ்வோடு தொடர்புள்ள வாழ்வியல் பிரச்சினைகளை அந்த மதங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக திகழ்கின்றது. விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த அறிவியல் உலகில் எழும் நவீன கால சவால்களை இஸ்லாம் தவிர வேறு மதங்களால் சமாலிக்க முடியாது .இதனால் தான் தேனடையை மொச்சும் வண்டுக்களைப் போல் இஸ்லாத்தை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மனித வாழ்வில் சிந்தி விழும் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அற்புத மார்க்கம். அந்த வகையில் இஸ்லாம் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக திகழும் குடும்பவியல் குறித்தும் துல்லியமாக எடுத்துறைக்கின்றது.

Friday, August 19, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (04)



அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)



அல்குர்ஆன் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கைக் கோட்பாடு

தற்காலத்தில் ஷீஆக்கள் என்று சொல்லப்படக்கூடிய ராபிழாக்கள் எம்மிடத்தில் இருக்கும் அல்குர்ஆன்,முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அல்குர்ஆன் அல்ல. அது மாற்றப்பட்ட, கூட்டிக் குறைக்கப்பட்ட குர்ஆனாகும் என சொல்கிறார்கள். அதிகமான ஷீஆ ஹதீஸ் கலை அறிஞர்கள் அல்குர்ஆன் திரிபு படுத்தப்பட்டுள்ளது என நம்புகிறார்கள்.இது பற்றி ஷீஆ அறிஞர் அன்னூரி அத் திப்ரிசீ என்பவர் தனது فصل الخطاب في تحرف كتاب رب الأرباب என்ற நுலில் குறிப்பிட்டுள்ளார்.


முஹம்மது பின் யஃகூப் அல்குலைனீ என்பவர் தனது 'உஸூலுல் காபி' என்ற நூலில் 'நிச்சயமாக ஷீஆ இமாம்களாலன்றி அல்குர்ஆன் முழுமையாக ஒன்று சேர்க்கப்படவில்லை'  என்ற தலைப்பில் பின் வரும் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

'மனிதர்களில் யாராவது அல்லாஹ் இறக்கியது போன்று அல்குர்ஆன் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னால், அவர் பொய்யர் எனப்படுவார். அல்லாஹ் இறக்கியது போன்று, அலி (ரழி)யும் அவருக்குப் பின் வந்த இமாம்களையும் தவிர வேறு யாரும் அதனை மனனம் செய்யவுமில்லை, ஒன்று சேர்க்கவுமில்லை என அபூ ஜஃபர் சொன்னதை தான் கேட்டதாக ஜாபிர் என்பவர் கூறுகிறார்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger