நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Thursday, September 29, 2011


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)




உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை


ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம் எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (07)



அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)                              

இமாமிய்யா பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு

தங்கள் இமாம்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், மறைவானவற்றையும் அறிகின்றவர்கள் என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
'உஸுலுல் காபி' எனும் நூலில் 'இமாம்கள் தாம் விரும்பினால் எதையும் அறிவார்கள்' என்ற தலைப்பில் குலைனி என்பவர், 'இமாம்கள் தாம் அறிந்துகொள்ள விரும்பினால் அறிவர்கள். தாம் எப்போது மரணிப்போம் என்பதையும் அறிவதோடு, அவர்களின் விருப்பமின்றி மரணிக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

Thursday, September 22, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (06)

அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் 
முஹம்மது கைஸான் (தத்பீகி)
                              
யூதர்களுக்கும் ராபிழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில், 'யூதர்கள் சொன்னார்கள் ஆட்சி, அதிகாரம் என்பன தாவுத் நபியுடைய குடும்பத்திற்குச் சொந்தமானது. அதேபோல், ராபிழாக்கள் சொன்னார்கள் இமாம் அலியுடைய பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது ராபிழாக்கள் யூதர்களுடைய வேலையைச் செய்வதே அதற்குரிய அத்தாட்சியாக உள்ளது.

யூதர்கள் தஜ்ஜால் வெளிப்படாதவரை ஜிஹாது இல்லை என்றனர். மேலும் அவர்கள் சந்திரன் மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.அவ்வாறே ராபிழாக்களும் சந்திரன் மறையும் வரை மஃரிபை பிற்படுத்தினார்கள்.

Friday, September 16, 2011



ஷீஆக்களின்
சீர் கெட்ட கொள்கைகள் (05)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் :

முஹம்மது கைஸான் (தத்பீகி

நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை

அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி  என்ற நுர்லில் அல் குலைனி  என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.

அதற்கவர்:

01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி  
03. சல்மானுல் பாரிஸி என்றார்.

பிகாருல் அன்வார் எனும் நுர்லில்  மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்

Thursday, September 15, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்(02)





உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு 
முகம்மது கைஸான் (தத்பீகி)



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.

குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும். ஒரு பெண் எதை விரும்புகின்றாலோ அதை அவள் செய்து கொள்ளட்டும்.இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காகஅறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.

Thursday, August 25, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


உலகில் உள்ள மதங்கள் சில வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன. பெரும்பாலும் மனிதனின் அன்றாட நிகழ்வோடு தொடர்புள்ள வாழ்வியல் பிரச்சினைகளை அந்த மதங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக திகழ்கின்றது. விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த அறிவியல் உலகில் எழும் நவீன கால சவால்களை இஸ்லாம் தவிர வேறு மதங்களால் சமாலிக்க முடியாது .இதனால் தான் தேனடையை மொச்சும் வண்டுக்களைப் போல் இஸ்லாத்தை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மனித வாழ்வில் சிந்தி விழும் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அற்புத மார்க்கம். அந்த வகையில் இஸ்லாம் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக திகழும் குடும்பவியல் குறித்தும் துல்லியமாக எடுத்துறைக்கின்றது.

Friday, August 19, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (04)



அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)



அல்குர்ஆன் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கைக் கோட்பாடு

தற்காலத்தில் ஷீஆக்கள் என்று சொல்லப்படக்கூடிய ராபிழாக்கள் எம்மிடத்தில் இருக்கும் அல்குர்ஆன்,முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அல்குர்ஆன் அல்ல. அது மாற்றப்பட்ட, கூட்டிக் குறைக்கப்பட்ட குர்ஆனாகும் என சொல்கிறார்கள். அதிகமான ஷீஆ ஹதீஸ் கலை அறிஞர்கள் அல்குர்ஆன் திரிபு படுத்தப்பட்டுள்ளது என நம்புகிறார்கள்.இது பற்றி ஷீஆ அறிஞர் அன்னூரி அத் திப்ரிசீ என்பவர் தனது فصل الخطاب في تحرف كتاب رب الأرباب என்ற நுலில் குறிப்பிட்டுள்ளார்.


முஹம்மது பின் யஃகூப் அல்குலைனீ என்பவர் தனது 'உஸூலுல் காபி' என்ற நூலில் 'நிச்சயமாக ஷீஆ இமாம்களாலன்றி அல்குர்ஆன் முழுமையாக ஒன்று சேர்க்கப்படவில்லை'  என்ற தலைப்பில் பின் வரும் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

'மனிதர்களில் யாராவது அல்லாஹ் இறக்கியது போன்று அல்குர்ஆன் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னால், அவர் பொய்யர் எனப்படுவார். அல்லாஹ் இறக்கியது போன்று, அலி (ரழி)யும் அவருக்குப் பின் வந்த இமாம்களையும் தவிர வேறு யாரும் அதனை மனனம் செய்யவுமில்லை, ஒன்று சேர்க்கவுமில்லை என அபூ ஜஃபர் சொன்னதை தான் கேட்டதாக ஜாபிர் என்பவர் கூறுகிறார்.

Sunday, August 7, 2011


அந்நியருக்கு மத்தியிலும்அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம்



மவ்லவி ஹபீல் (ஸலபி)

இன்று, பல்வேறு கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. அவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தான் அதிகளவு பிரசாரம் செய்துவருகின்றன. நம் நாட்டில் இஸ்லாத்தின் வாடையை நுகராது, ஏகத்துவக் கொள்கையின் இன்பத்தை உணராது, நரகத்தின் விளிம்பில் நிற்கும் முஸ்லிமல்லாத மக்களைப் பற்றி பெரிதாக அவை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதனால், அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் மோசமான சில நடவடிக்கைகளினால் அவர்களிற் சிலர் இஸ்லாத்தையே வெறுக்கின்றனர். இதனால், நமக்கும் அவர்களுக்குமிடையே பகைமை உணர்வு படர ஆரம்பித்துள்ளது. இந்தக் கசப்புணர்வைக் களைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது.

இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும், ஆன்மீக தகிடுதத்தங்களுக்கும், மதவாதிகளின் சுரண்டல்களுக்கும் உட்பட்டு, ஏமாற்றமடைந்துள்ள இவர்களின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகத் திகழும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை நாம் வழங்க முனைய வேண்டும்.




 ஷீஆக்களின்
சீர்கெட்ட கொள்கைகள் (03)



அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)


அல்பதாவு பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை கோட்டாடு 

'பதாவு' என்றால் தோன்றுதல் என்பதாகும். அத்தோடு வளர்ச்சி புதிய கருத்து என்ற கருத்துக்களையும் வழங்குகிறது. இக்கருத்துக்களைப் பார்க்கும் போது ஒன்றைப் பற்றி முன்னர் அறியாமலிருந்து பின்னர் தெரிய வருவது என்பதையே இது குறிக்கிறது.

இவ்விரு பன்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாதவைகளாகும்.அல்லாஹ் இவைகளை விட்டும் உயர்ந்தவன் பெரியவன்.
அல்லாஹ்வுடன் அறியாமையை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.?

 قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ   يُبْعَثُونَ سورة النمل : 65  
அல்லாஹ் தன்னைப் பற்றி வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'என்று கூறுவீராக எனக் குறிப்பிடுகின்றான் (சூரதுல் நம்ல் 65)

இதற்கு மாற்றமாக ஷீஆ இமாம்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதுவும் மறையாது என்று ராபிழாக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இதுதான் நபியவர்கள் கொண்டுவந்த நம்பிக்கைக் கோட்பாடா?

Tuesday, August 2, 2011


தவ்ஹீத்வாதிகள் கொலை செய்தார்களா? திசை திருப்பப்படும் கெக்கிராவைச் சம்பவம்.


“சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த” கதையாகிய தப்லீக் ஜமாத்தினர்.



இலங்கை முஸ்லீம்கள் வரலாற்றில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரக் கலத்தில் எத்தனையோ பிரச்சினைகள், சண்டைகள், சிக்கள்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினைகளில் ஒரு இடத்தில் கூட ஏகத்துவவாதிகள் அடித்தார்கள், கொலை செய்தார்கள் என்று யாராலும் நிரூபிக்க முடியாது.

தவ்ஹீத் வாதிகள் அடிவாங்கிய வரலாறு உண்டு, ஊர் நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உண்டு, ஏன் கொலை செய்யப்பட்ட வரலாறுகள் கூட உள்ளது. ஒரு இடத்தில் கூட அடித்தார்கள் வெட்டினார்கள் என்ற வரலாறு கிடையாது.

ஆனால் கடந்த வியாழக் கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் தவ்ஹீத் வாதிகளை கொலை காரர்களாக காட்டுவதற்க்கு முனைகிறது ஒரு கும்பல்.

Thursday, July 28, 2011

ரமழானை அலங்கரிப்போம் (02)





முஹம்மது கைஸான் (தத்பீகி)


ஐங்காலத் தொழுகையைக் கூட்டாக நிறை வேற்றுவோம்.


நம்மில் சிலர் நோன்பு வைப்பார்கள் ஆனால் தொழ மாட்டார்கள் இஸ்லாத்தில் நோன்பு எவ்வாறு கடமையோ அவ்வாறே தொழுகையும் கடமை என்பதை ஏனோ உணர மறுக்கிரார்கள். இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாக திகழ்வது தொழுகை.தொழுகைதான் காபிருக்கும் முஸ்லிமிற்கும் மிடையே வேறுபாட்டைக் காட்டக்கூடியது என நபிகளார் நவின்றுள்ளார்கள். தொழுகையைப் பேணுவது முஸ்லிமான ஆன் பெண் இரு பாலாருக்கும் கடமையாகும். தொழுகை மார்க்கத்தின் துானும் அமல்களில் மிக உன்னதுமானதுமாகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல் தொழுகையை நிலைநிறுத்துதல்இ ஸகாத் வழங்குதல்இ ஹஜ் செய்தல்இ ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 8



இஃதிகாஃபின் சட்டங்கள்



இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும்வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின்813 செய்தி ஆதாரமாக உள்ளது.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger