ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்.(14)
அரபு மூலம்.
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது (அஸ்ஸலபி)
பைஅத் பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு என்ன?
ஷீஆக்களின் 12 இமாம்களின் அரசுகளைத் தவிர, ஏனைய அரசுகள் அனைத்தும் போலியானது என ராபிழாக்கள் கருதுகின்றனர்.
'காயிம் என்பவருடைய கொடிக்கு முன் உயர்த்தப்படும் ஒவ்வொறு கொடியும்; செல்லுபடியற்றது.
அதன் உரிமையாளரும் அநியாயக்காரனாவான்' என 'அல் காபி பீ ஷரஹில் மாஸன்தரானி, நுஃமானியின் அல்கீபா போன்ற நூற்களில், அபூ ஜஃபர் என்பவர் இக்கருத்தைக் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அதன் உரிமையாளரும் அநியாயக்காரனாவான்' என 'அல் காபி பீ ஷரஹில் மாஸன்தரானி, நுஃமானியின் அல்கீபா போன்ற நூற்களில், அபூ ஜஃபர் என்பவர் இக்கருத்தைக் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
தகிய்யாவின் மூலம் அல்லாஹ்விடமிருந்து பெற்ற ஆட்சியாளருக்கே அடிபணிய வேண்டும். இமாமத்துக்கு தகுதியில்லாத அநியாயக்கார இமாம்கள் பல வகையினர் உள்ளனர். அவர்களில் இமாம் அல்லாத முகஸ்துதி ஆட்சியாளர்களும் உள்ளனர். அதிலும் குறிப்பாக அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோர் இத்தகைய ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஷீஆக்கள் கூறுகின்றனர்.
நன்னெறி நின்ற இம்மூன்று பேரைப் பற்றி அவர்களின் வழி கேட்டு இமாம் அல் மஜ்லிஸி என்பவர், 'அவர்கள் மூவரும் கொள்ளையடித்தவர்கள். மார்க்கத்தை விட்டும் மதம் மாறியவர்கள. அஹ்லுல் பைத்துகள் அனைவர் மீதும் அநியாயம் செய்த அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' எனக் கூறுகின்றார்.' ஷீஆ சார்பான ஹதீஸ்களை அறிவிக்கும் இவரின் மூலாதார நூலிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிலே கலிபாக்களுக்கு உதவி செய்தவர்களை அநியாயக்காரர்களாக அவர் சித்திரித்துள்ளார். 'யாராவது ஒருவர் சத்தியத்திற்கோ, அசத்தியத்திற்கோ அவர்களிடம் சென்று தீர்வு வேண்டினால், அது அவரின் உண்மையான உரிமைக்காக இருந்தாலும் சரியே! அது வெறுக்கத்தக்கதாகும். எனவே, அவர் அநியாயக்காரனின் தீர்பைப் பெறுகிறார்' என ஹன்ளலா கூறியதாக குலைனி என்பவர் அறிவிக்கிறார்.
குமைனி தனது 'அல்ஹுகூமா அல் இஸ்லாமிய்யா' என்ற நூலில் மேற் சொல்லப்பட்ட செய்தியை மேற்கோள் காட்டி, 'இமாம் என்பவர், தானே ஏனைய அதிகாரிகளிடம் தீர்வு பெறுவதைத் தடுப்பார். ஒருவர் அரசர்களிடம் போவது அநியாயத்திற்கு ஒத்தழைப்பு வழங்குவதாகும்' என்று எழுதியுள்ளார்.
'அத்தகிய்யா பீ பிக்ஹி அஹ்லுல் பைத்' என்ற நூலில், 'முஸ்லிம் அல்லாத அநியாயக்கார அரசனிடம் வேலை செய்வது பற்றிக் குறிப்பிடும் போது, அநியாயக்கார அரசன் என்பவன் சுன்னி அரசனே (அஹ்லுஸ் சுன்னாவைச் சேர்ந்தவர்) என குறிப்பிடுகிறார்.
அநியாயக்கார (அஹ்லுஸ் சுன்னாவைச் சேர்ந்தவர்) அரசர்களிடம் பணி புரிபவர்களை 3 வகையாகப் பிரிக்கிறார்.
1) ஷீஆ முஃமின்களின் தேவைகளை, குறைகளை நிவர்த்தி செய்வதற்காகப் பணிபுரிதல்
2) தமது வாழ்க்கை வசதிகளை வளப்படுத்திக் கொள்ள பணி புரிதல்.
இது அனுமதிக்கப்படினும் வெறுப்புக்குரியேதே. முஃமின்களாகிய ஷீஆக்களின் தேவைகள் இதில் நிவர்த்தி செய்யப்படுவதால், அதற்கு குற்றப்பரிகாரமாக இது மாறும்.
3)அடிப்படைத் தேவையான உணவு, உடை பெற்றுக் கொள்ள வேலை செய்தல். இது ஆகுமானதாகும்.
இஸ்லாமிய சகோதரர்களே!
எவ்வாறெல்லாம் ஷீஆ யூதர்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களை அநியாயக்காரர்களாக சித்திரித்துள்ளனர்! அஹ்லுஸ் ஸுன்னாக்களுடன் நிபந்தனை அடிப்படையில் பணிபுரிவதற்கு அங்கீகாரம் அளிப்பதோடு, ஷீஆக்களுக்கு பிரயோசனம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர். தவறான இக்கண்ணோட்டம் தான் அவர்கள் அனைவரிடமும் உள்ளது.
தங்களை அதிகாரம் செய்ய ராபிழாக்களையே அவர்கள் நியமிக்கின்றனர். எந்த இடத்தில் வேலை செய்தாலும் அஹ்லுஸ்ஸுன்னாக்களை ஒதுக்கிவிட்டு, தமது ஷீஆ சகோதரர்களை அவ்விடத்திற்கு எடுத்து எல்லாவற்றிலும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள, அவர்கள் முடியுமான அளவு முயற்சிக்கின்றனர்.
அல்லாஹ் முஸ்லிம்களை ராபிழாக்களினது கொடூரங்களிலிருந்து பாதுகாப்பானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !